Nagaratharonline.com
 
கொப்பனாபட்டி ஊராட்சிக்கு தூய்மைக்கான விருது  Jun 27, 13
 
கொப்பனாபட்டி ஊராட்சிக்கு தூய்மை ஊராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.

ஊராட்சிகளில் தூய்மை பராமரித்தல், சிறந்த நிர்வாகம், மரம் வளர்ப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசால் தூய்மை ஊராட்சி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற விழாவில் மாவட்டத்துக்கு ஒரு ஊராட்சி என 31 ஊராட்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவில் புதுக்கோட்டை மாவட்டம், கொப்பனாபட்டி ஊராட்சிக்கு தூய்மை ஊராட்சி விருது மற்றும் பரிசுத் தொகை ரூ. 5 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஊராட்சித் தலைவர் பி. மாரிமுத்துவிடம் வழங்கினார்.