Nagaratharonline.com
 
கவியரசர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு  Jun 25, 13
 
திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டியில் கவிஞர் கண்ணதாசனின் 87 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறுகூடல்பட்டியில் அமைந்துள்ள கண்ணதாசனின் இஷ்ட தெய்வமான மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அங்குள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் கண்ணதாசனின் காலத்தால் அழியாத காவியங்கள், கவிதை வரிகள், அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலின் பெருமைகள் எடுத்துக் கூறப்பட்டன.