Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்  Jun 17, 13
 
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, பேரூராட்சி பகுதியில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கார்பைட் கல் வைத்து பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள், செயற்கையாக சாயமேற்றப்பட்ட பச்சை பட்டாணி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.