Nagaratharonline.com
 
NEWS REPORT: கோவிலூர் மடாலய நிறுவனர் சிலை திறப்பு  Jun 14, 13
 
கோவிலூர் மடாலயத்தை 1809-ஆம் ஆண்டு நிறுவிய முத்துராமலிங்க ஆண்டவர் சிலை திறப்புவிழா நடைபெற்றது.

கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏஆர். லெட்சுமணன் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சேது. சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சே. குமரப்பன் வரவேற்றார். பேராசிரியர் கார்மேகம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.