Nagaratharonline.com
 
NEWS REPORT: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் திருப்பணி தொடக்கம்  Jun 14, 13
 
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் திருப்பணி தொடக்கத்துக்கான பாலஸ்தாபன நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் உள்ள தாயுமானசுவாமி, அருள்மிகு மட்டுவார்குழலம்மை விமானங்கள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளின் விமானங்கள், சாலை கோபுரம் மற்றும் அருள்மிகு மாணிக்க விநாயகர் ராஜகோபுரம், மூலஸ்தான விமானங்கள் ஆகியவற்றுக்கு திருப்பணிகளை மேற்கொள்ள விக்ரகங்களை அகற்றாமல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.

இதையொட்டி சிறப்பு யாகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.