Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் போக்குவரத்து காவல்நிலையம் தொடங்க வலியுறுத்தல்  Jun 14, 13
 
பொன்னமராவதி நகரில் தமிழக முதல்வர் அறிவித்த போக்குவரத்து காவல்நிலையம் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னமராவதி நகரில் பேருந்துநிலையம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் அவசர சிகிச்சைக்கு நோயாளியை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மீண்டு செல்ல பல நிமிடங்களாகி விட்டது. மேலும் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனி என இரு நாள்கள் சந்தை நடைபெறுகிறது. சந்தை நாள்களில் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் பொன்னமராவதி உள்ளிட்ட சில நகரங்களில் புதிதாக போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் பொன்னமராவதியில் இதுநாள்வரை அதற்குரிய பணிகள் ஏதும் நடைபெறுவதாக தெரியவில்லை.

எனவே முதல்வர் அறிவித்த போக்குவரத்து காவல்நிலையம் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.