Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி திருமண மண்டபத்தில் ரூ.4 லட்சம் நகை, பணம் திருட்டு  Jun 14, 13
 
வலையபட்டியை சேர்ந்தவர் சிதம்பரம்,56. நேற்று இவரது மகன் திருமணம், பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மணப்பெண்ணின் 8 பவுன் தாலி செயின், 7 பவுன் நெக்லஸ், ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கம், மற்றும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,கார்டு உள்ளிட்டவைகளை சிதம்பரம், தனது கைப்பையில் வைத்திருந்தார்.
பையை அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு, போட்டோ எடுக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பையை காணாமல் திடுக்கிட்டார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ.,சரவணபோஸ் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.