Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் ஒன்றிய அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்  Jun 9, 13
 
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய முன்பு உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் கட்டப்பட்டிருந்தது.

மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் நேற்று அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை ஓரம் பொக்லின் இயந்திரம் மூலமாக வடிகால் வெட்டப்பட்டது.

சாலை ஓரங்களில் வடிகால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் மழை நீர் அனைத்து சாலைகளிலே சென்றது. இதனால் சாலைகள் அடிக்கடி குண்டும் குழியாக விடுகின்றது.

இப்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யமால் தடுக்கப்பட்டு வந்தால் பொன்னமராவதி- திருப்பத்தூர் சாலை ஒழுங்காக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.