Nagaratharonline.com
 
திருப்புத்தூர் அருகே தொடர் விபத்து : கிடப்பில் மேம்பாட்டு திட்டம்  Jun 6, 13
 
திருப்புத்தூரிலிருந்து காரைக்குடி செல்ல இரு வழிகள் உள்ளன. கும்மங்குடி பாலத்தை அடுத்து குன்றக்குடி,நாச்சியாபுரம் ஆகிய இரு பிரிவுகளாகரோடுகள் பிரிந்து காரைக்குடி செல்கின்றன. இந்த 3 ரோடுகள் சந்திப்பில்கடந்த சில ஆண்டுகளில் பல விபத்துக்கள் நடந்து, பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட வாகனங்கள் மோதிக் கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். மூன்று ரோடும் நல்ல அகலமான ரோடுகளாக இருந்தும் விபத்துக்கள் தொடர்வதைத் தடுக்க முடியவில்லை.

பெரும்பாலும் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் நடைபெறுவது போக்குவரத்து ஆய்வில் தெரியவந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் ரூ.50 லட்சம் மதிப்பில் போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டனர். அப்பகுதியில் தேவையான மீடியன்கள் உருவாக்கி, வாகன போக்குவரத்தை பிரித்து,மோதலைத் தடுக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று போக்குவரத்து துறைச் செயலரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் உள்ளது.

இத்திட்டத்திற்கு விரைவாக நிதி அனுமதி அளித்து நிறைவேற்றினால், இப்பகுதியில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.