Nagaratharonline.com
 
நெற்குப்பையில் குறைந்த மின்னழுத்தம்: குடிநீர் சப்ளை பாதிப்பு  May 26, 13
 
நெற்குப்பையில் குறைந்த மின் அழுத்தத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்குப்பை பேரூராட்சியில் பரியாமருதபட்டி, புரந்தன்பட்டி,நல்லூரணி,வடுகபட்டி,கிளாமடம்,நவனிக்களம் பகுதிகளுக்கு மேல்நிலைத் தொட்டிகள் மூலம் காவிரிக்குடிநீர் சப்ளையாகிறது. இத்தொட்டிகளுக்கு தனித் தனியாக போர்வெல் மூலமும் தண்ணீர் ஏற்றும் வசதி உள்ளது. காவிரி நீர் சப்ளை குறையும் போது, இந்த மாற்று ஏற்பாட்டில் குடிநீர் விநியோகிக்கப்படும்.

அண்மை காலமாக, நெற்குப்பையில் சில டிரான்ஸ் பார்மர்கள் பழுததால் குறைந்த மின்னழுத்தம் உள்ளது.வீடுகளில் லைட் எரியாமல் சிரமப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், குறைந்த மின்அழுத்தம் காரணமாக 6 மேல்நிலைத் தொட்டிகளிலும், முழுமையாக 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை ஏற்ற முடியதில்லை. இதனால் குடிநீர் விநியோக நேரம் குறைக்கப்படுகிறது. மின் வாரியம் டிரான்ஸ்பர் பழுதை நீக்கி, குடிநீர் சப்ளை பாதிக்காமல் இருக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.