Nagaratharonline.com
 
நேமத்தான்பட்டியில் "சானா" இலவச மருத்துவமனை திறப்பு விழா  May 19, 13
 
நேமத்தான்பட்டியில் மாணிக்கவாசகர் தெருவில் மறைந்த ஒன்றியத் தலைவரும், தொழிலதிபருமான வள்ளல் சடையப்பச் செட்டியார் நினைவாக சானா என்ற பெயரில் இலவச மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில் இலவசமாக மருத்துவச் சிகிச்சை, மருந்து மாத்திரைகள், ஆலோசனைகளை மருத்துவர் வழங்குவார்.

மருத்துவமனை நிர்வாகி முத்துக்குமார் செட்டியார் மருத்துவமனையைத் திறந்து வைத்தார். வள்ளி ஆச்சி குத்துவிளக்கேற்றினார்.

கானாடுகாத்தான் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் வசந்தாள் ஆச்சி, சிவ. சிதம்பரம் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேமத்தான்பட்டி முக்கிய பிரமுகர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். மருத்துவர் நாச்சியப்பன் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார்.