Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் "ஏடிஎம்' வசதி கோரிக்கை  May 10, 13
 
கண்டவராயன்பட்டி, திருப்புத்தூர்-பொன்னமராவதி, திருப்புத்தூர்-வேலங்குடி, கீழச்சிவல்பட்டி - சிங்கம்புணரி, போன்ற ரோடுகள் சந்திக்கும் மையமாக உள்ளது.இப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இங்கு வந்து செல்கின்றனர்.

இங்குள்ள மக்கள்சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா,ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அலுவல் நேரம் இல்லாத போதும், விடுமுறை நாட்களிலும் அவசரத்திற்கு வங்கியிலிருந்து பணம் எடுக்க, ஏடிஎம் வசதி இல்லாததால், இப்பகுதியினர் மிகவும் சிரமப்படுகின்றனர். சுமார் 6 கி.மீ.தொலைவிலுள்ள திருப்புத்தூர் அல்லது 18 கி.மீ.தொலைவிலுள்ள பொன்னமராவதிக்கு செல்ல வேண்டியுள்ளது.
கண்டவராயன்பட்டியில் ஏடிஎம் வசதி ஏற்படுத்த இப்பகுதியினர் கோரியுள்ளனர். இதே போன்று, நெற்குப்பை பேரூராட்சியிலும், இந்தியன் வங்கி இருந்தும், ஏடிஎம் வசதி இல்லை. இங்குள்ளவர்களும் 4 கி.மீ.தூரத்தில் உள்ள பொன்னமராவதிக்கே செல்ல வேண்டியுள்ளது.