Nagaratharonline.com
 
திண்டுக்கல்-பொன்னமராவதி இணைப்புச் சாலை படுமோசம் அரசு பஸ்கள் நிறுத்தம்  May 9, 13
 
திருப்புத்தூரிலிருந்து செல்லும் திண்டுக்கல், பொன்னமராவதி ரோடு,கே.வைரவன்பட்டி வழியாக செல்லும் இணைப்பு ரோடு மிகவும் மோசமாக உள்ளதால் கிராமத்தினர் போக்குவரத்து வசதிக்கு அவதிப்படுகின்றனர்.

கண்டவராயன்பட்டி,தெக்கூர்,நெற்குப்பை, பொன்னமராவதியிலிருந்து திருப்புத்தூருக்கு குறைந்த தூரத்தில் வந்து,செல்ல கே.வைரவன்பட்டி இணைப்பு ரோடு பயன்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இந்த ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாகி விட்டது.இந்த ரோட்டின் ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டு, மீதமுள்ள 2.6 கி.மீ. தூரம் பழுது பார்க்கப்படவில்லை. ரோடு பழுதால் இக்கிராமங்களின் வழியாக சென்ற 2 அரசு பஸ்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.