Nagaratharonline.com
 
தெக்கூர் துணை மின் நிலையம் அருகில் மின்சாரம் பாய்ந்து பணியாளர் சாவு  May 7, 13
 
நெற்குப்பையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் முத்து,35. ஒப்பந்த தொழிலாளராக மின்துறையில் பணியாற்றுகிறார்.நேற்று தெக்கூர் துணை மின் நிலையம் அருகில்,தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இடது கையில் மின்சாரம் பாய்ந்ததில்,இடது கை எரிந்து துண்டானது. கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

சக பணியாளர்கள் உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். தகுந்த பாதுகாப்பின்மையே இவ்விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நெற்குப்பை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.