Nagaratharonline.com
 
பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா தொடக்கம்  May 3, 13
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நிகழ்வாக காலை அழகியநாச்சியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மதியம் பட்டமரத்தான் கோவில் முன்பு அன்னதானம் நடைபெற்றது. இரவு பட்டமரத்தான் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இந்திராநகர், நாட்டுக்கல், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு ஏந்தி வந்து சுவாமிக்கு செலுத்தி வழிபட்டனர்.