Nagaratharonline.com
 
வறண்டது சரவணப் பொய்கை, பழநியில் பக்தர்கள் அவதி  Apr 28, 13
 
பழநி கோயிலின் முக்கிய தீர்த்தமான, சரவணப்பொய்கை தீர்த்தக் கிணறு, பராமரிப்பு இன்றி, தண்ணீர் இல்லாமல் வற்றியுள்ளது.

இவ்வாண்டு போதிய மழையில்லாததால் பழநி வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சரவணப்பொய்கை புனித தீர்த்தக் கிணற்றில் தண்ணீர் குறைந்துள்ளது.

அதன் அருகே போர்வெல் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பக்தர்கள் குளிக்க தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரே ஒரு குழாயில் மட்டும் சிறிதளவு தண்ணீர் வருகிறது. இதனால் பக்தர்கள் புனித தீர்த்தத்தில் குளிக்க முடியாமல், வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர்.