Nagaratharonline.com
 
வேந்தன்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து தீ வைத்த 3 பேர் கைது  Jan 3, 10
 
பொன்னமராவதி அருகே வீட்டின் கதவை உடைத்து பொருட்களுக்கு தீ வைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்தவர் மரகதவள்ளி (74). இவர் கடந்த 17-9-2009ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் கதவை உடைத்து சென்று துணிகள், மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர்.

இதில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின.இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 3 மாதங்களாக தீ வைத்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு மற்றும் போலீசார் இரவு ரோந்து சென்றபோது, பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் ரோட்டில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் நாகர்கோவில் வீஸ்வரம் குமரேசன் மகன் மகாராஜா (26), கன்னியாகுமரி அழகியபாண்டிபுரம், குளத்திரப்பட்டி சொர்ணதேவர் மகன் சேது (26), திருநெல்வேலி வையாபுரி நகர் ராமன் மகன் மாரி என்ற மாரியப்பன் (25) ஆகியோர் என்பதும் மரகதவள்ளியின் வீட்டில் தீ வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

source : Dinamalar 04/01/2010