Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி. விஜய ஆண்டிற்கானபஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.  Apr 14, 13
 
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது.

அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, தங்கக் கவசத்தில் அருள்பாலித்த கற்பகவிநாயகரை பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் கோயில் குளத்தில் அங்குச்தேவர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கும் தீர்த்தவாரி நடந்தது.வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் உட் பிரகாரத்தில் வலம் வந்தார்.மாலையில் சுக்ல சதுர்த்தியில் பிறந்துள்ள விஜய ஆண்டிற்கானபஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கௌரி சந்திரசேகர சுவாமிகள் ரிஷப வாகனத்தில் வலம் வந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர்கள் ராமநாதன் செட்டியார், கண்ணன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.