Nagaratharonline.com
 
காரைக்குடியில் தொடர் திருட்டு: பெண்கள் அச்சம்  Jan 3, 10
 
காரைக்குடி : காரைக்குடியில் பெண்களிடம் தொடர் வழிப்பறி சம்பவம் நடப்பதால் ரோட்டில் நடமாடவே பெண்கள் அச்சம் அடைகின்றனர். காரைக்குடியில் சில நாட்களாக தனியாக இருக்கும் பெண்களை வழிமறித்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் புதுவயல் அரிசி ஆலை உரிமையாளர் வெள்ளைச்சாமி வீட்டில் கத்தி முனையில் முகமூடி கொள்ளையர்கள் பல லட்சம் ரூபாய் நகைகளை கொள்ளையடித்தனர்.சாக்கோட்டை அருகே அழகியநாச்சியபுரத்தை சேர்ந்த ரம்பா வீட்டை உடைத்து பீரோவில் இரந்த ஏழுபவுனை கொள்ளையடித்தனர்.கோ.வேலங்குடியை சேர்ந்தவர் பகவதி, அதிகாலை தனது வீட்டிற்கு வீட்டு முன் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது டூவீவலரில் வந்த மர்ம நபர்கள் இவரது கழுத்தில் இருந்த ஆறு பவுன் செயினை திருடினர். இது போன்று நகரில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.ரோந்து பணி முடக்கம்: தொடர் திருட்டை தடுக்க கோவிலூர், ஸ்ரீராம்நகர், பர்மா காலனி, பொறியியல் கல்லூரி உட்பட 11 இடங்களில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்திருந்தனர். இங்கு போலீசார் ரோந்து பணியில் சரியாக ஈடுபடாததால் மீண்டும் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. தொடர் திருட்டை தடுக்க ராஜசேகரன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source:Dinamalar Jan 4, 2010