Nagaratharonline.com
 
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் சித்திரைக்கனி விழா  Apr 14, 13
 
வைரவன்பட்டியில் வளரொளிநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்திரைக்கனி விழா நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வைரவர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வைரவருக்கு எதிரே கண்ணாடி அமைக்கப்பட்டு அதன் முன்பு அனைத்து வகையான பழங்களும் வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், உற்சவர் கோவிலின் உட்பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மாலை 5 மணிக்கு விஜய ஆண்டின் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பக்தர்களுக்கு வைரவர் நாணயம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை முன்னாள் நிர்வாகிகள் CT.S.சிதம்பரம், AL.SP.லெட்சுமணன், SP.ராமசாமி, L.S.பழனியப்பன், மெய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்