Nagaratharonline.com
 
அழகப்பச் செட்டியார் பிறந்த தின விழா  Apr 7, 13
 
காரைக்குடியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கிய. RM.அழகப்பச் செட்டியாரின் 104 ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலையில் பவ நகர் ஸ்டேடியத்தில் இருந்து மலர் வளையம் எடுத்துக்கொண்டு அழகப்பர் நினைவிடத்திற்கு அழகப்பரின் மகள் உமையாள் ராமநாதன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சேது. சுடலைமுத்து, முக்கியப் பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக எல்.சிடி.எல். பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கத்தில் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில் பேராசிரியர் கண.சிற்சபேசன் சிறப்புரையாற்றினார். பல்கலை. துணைவேந்தர் சேது. சுடலைமுத்து தலைமை வகித்தார்.

விழாவில், ஏஎல்.ராமநாதன், உண்ணாமலை ராமநாதன், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் எஸ். கலியமூர்த்தி, கருத்தபாண்டியன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.