Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க கடற்கரை சந்திப்பு நிகழ்ச்சி  Apr 7, 13
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி நடத்தும், " கடற்கரை சந்திப்பு நிகழ்ச்சி" 07/04/2013 அன்று மாலை பெசன்ட் நகர் அறுபடைவீடு ஆலயத்தின் அருகில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

உறுப்பினர்களுக்கு மாலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் இரவு உணவு சுவையாக வழங்கப்பட்டது. நடைபெற்ற விளையாட்டு விழாவில் வயது வேறுபாடு இன்றி அனைவரும் கலந்துகொண்டு மாலைப்பொழுதை மகிழ்ந்து கழித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் திரு.L.P.KR.RM. இராமநாதன் , செயலாளர் PR.சுந்தர், பொருளாளர் M. வெள்ளையன் மற்றும் இணைச் செயலாளர் S.சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்