Nagaratharonline.com
 
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண அனுமதிச் சீட்டு ஏப்.20 முதல் விநியோகம்  Apr 5, 13
 
 
மதுரை சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.17 மணி முதல் 8.41 மணிக்குள் நடைபெறுகிறது. மேல-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள புதுப்பிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் காண்பதற்கு சுமார் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

முதன் முறையாக 6,500 பேர் அனுமதிக் கட்டணம் இன்றி இலவசமாக முன்னுரிமை வருகை அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த இலவச அனுமதியில் திருக்கோவிலுக்குள் வரவிரும்புவோர் தெற்குக் கோபுர வாசலில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ரூ.200, ரூ.500 உள்ளிட்ட கட்டண அனுமதிச் சீட்டைப்பெற விரும்புவோர் ஏப்.20 முதல் 23 ஆம் தேதி வரை திருக்கோவில் அனைத்து கோபுர வாசல்களில் உள்ள விற்பனை இடங்களில் வாங்கலாம். இந்த அனுமதிச் சீட்டைப் பெற்ற 4 ஆயிரம் பேரும் வடக்குக் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.

ரூ.500 கட்டண அனுமதிச் சீட்டைப் பெறும் 1,500 பேரும் மேற்குக் கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். இதே வழியில்தான் பெயர் பொறித்த வில்லை (பேட்ஜ்) அணிந்த முக்கிய விருந்தினர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.