Nagaratharonline.com
 
திருவிளையாடல் புராண சொற்பொழிவு நிறைவு  Jan 2, 10
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் திருவிளையாடல் புராண ஒருவார தொடர் சொற்பொழிவு வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இங்கிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் குழுவின் 34-வது ஆண்டு விழா அதன் தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. காசிநாதன் வரவேற்றார். கயிலைமணி நீலா இறைவணக்கம் பாடினார். ஜமீன்தார் நாராயணன் செட்டியார் துவக்கி வைத்தார்.

பொற்கிழி கவிஞர் அரு.சோமசுந்தரன் திருவிளையாடல் புராண சொற்பொழிவை கடந்த டிசம்பர் மாதம் 26-ல் துவக்கி டிசம்பர் 31-ல் நிறைவு செய்தார்.

பஜனைக்குழு செயலாளர் அருணாச்சலம், சோமசுந்தரம், ராஜமாணிக்கம், வைரவன், ஞானசம்பந்தன், போராசிரியர் சுப்பையா, அரிமா சங்கச் செயலர் வேலுச்சாமி ஆகியோர் வாழ்த்தினர். தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்

source : Dinamani 03/01/2010