Nagaratharonline.com
 
நெற்குப்பை பரியா மருதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் அறை கட்ட ரூ.30 லட்சம் ஒதுக்கீடு  Apr 3, 13
 
சிவகங்கை மாவட்டத்தில், சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட அரசு ரூ.1.23 கோடி ஒதுக்கியுள்ளது.

அந்த வகையில், நாட்டரசன்கோட்டையில் பக்தர்கள் தங்கும் அறை, கழிப்பிடம் கட்ட ரூ.34 லட்சம்.

நெற்குப்பையில் உள்ள பரியா மருதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ரூ.30 லட்சம் என, சுற்றுலாத்துறை மூலம், கோயில் தலங்களில் அடிப்படை வசதிகளுக்கு ரூ.1.23 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.