Nagaratharonline.com
 
கணேசர் கல்லூரி சன்மார்க்க சபையின் செயலராக இருந்த சித. ராமலிங்கம் மறைவையொட்டி இரங்கல் கூட்டம்  Apr 1, 13
 
மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி சன்மார்க்க சபையின் செயலராக இருந்த சித. ராமலிங்கம் மறைவையொட்டி கல்லூரியில் இரங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை செயலரும், கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாலை நேரப் பிரிவின் செயலருமாகிய சித. ராமலிங்கம் செட்டியார் மார்ச் 19-ம் தேதி பெங்களூருவில் காலமானார்.

இவர், பாவத்தின் நிழல், வாழும் வழி, தொல்காப்பிய வளம், அவன் பல வடிவம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது இரங்கல் கூட்டத்துக்கு சன்மார்க சபைத் தலைவர் பா.சா. சிங்காரம் தலைமை வகித்தார்.