Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்  Mar 31, 13
 
இலங்கை இனப்படுகொலையை கண்டித்து பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி ஊர் பொதுமக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும்,ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும், காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்கக் கோரியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை தடுக்கக்கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்துக்கு ஊராட்சிமன்ற தலைவர் பழனியப்பா பெரியகருப்பா தலைமை வகித்தார்.