Nagaratharonline.com
 
வலையபட்டி மலையாண்டி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா  Mar 29, 13
 
மலையாண்டி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர மண்டகப்படி விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சேங்கைக்கரை செல்வவிநாயகர்,உடையபிராட்டி அம்மன்,மலையாண்டி சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இரவு 2 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்குகளில் மலையாண்டி சுவாமி,சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலாவாக புதுப்பட்டியில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகள்,அண்ணாசாலை,நாட்டுக்கல்,வலையபட்டி வழியாக மலையாண்டி கோவிலை அடைந்தனர். இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.