Nagaratharonline.com
 
மதகுபட்டியில் உண்ணாவிரதம்  Jan 2, 10
 
சிவகங்கை அருகே மதகுபட்டி, பெருங்குடி ஊராட்சியை சேர்த்து பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டி கிராமத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.ஊராட்சி தலைவர் வைரவன் தலைமை வகித்தார். குணசேகரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பகீரதநாச்சியப்பன் கோரிக் கையை விளக்கி பேசினார்.தீர்மானம்: இரு ஊராட் சியையும் இணைத்து பேரூராட்சியா தரம் உயர்த்தவேண்டும். சித்த மருத்துவ மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், மதகுபட்டியை மையமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் துவக்கவேண்டும். அரசு துவக்க பள்ளியை நடுநிலையாக தரம் உயர்த்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

source : Dinamala 03/01/2010