Nagaratharonline.com
 
பொன்னமராவதி வணிக வளாகத்தில் தீ விபத்து: 3 கடைகள் நாசம்  Mar 21, 13
 
பொன்னமராவதி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் நாசமாகின.

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி வணிக வளாகத்தில் நாளிதழ் மற்றும் வார இதழ் முகவர் ஆர்.எம்.எஸ். ராஜாவின் பெட்டிக் கடையில் புதன்கிழமை இரவு தீப்பிடித்தது. இதைத் தொடர்ந்து, அருகிலிருந்த அருணகிரி, சந்திரன் ஆகியோரது கடைகளிலும் தீ பரவியது.

இந்த தீ விபத்தில் பெட்டிக் கடை முழுவதும் எரிந்து நாசமாகின.

இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், அருகிலிருந்த 2 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.