Nagaratharonline.com
 
பஸ் வசதியில்லாததால் ரயில் பயணிகள் அவதி  Mar 20, 13
 
காரைக்குடி ரயில் நிலையத்தில், ரயில்கள் வந்து செல்லும் நேரத்தில்,போதிய பஸ் வசதியில்லாததால்,ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கும், நகருக்கும் இடைப்பட்ட தூரம் மூன்று கி.மீ.,

12 ரயில்கள் காரைக்குடியை கடந்து செல்கின்றன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, ரயில்கள் நின்று செல்லும் நேரங்களில், போதிய பஸ் வசதி இல்லாததால்,பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருதி, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, தனி பேருந்தும், வட்ட பேருந்தும் இயக்க வேண்டும்,என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது