Nagaratharonline.com
 
மதகுபட்டி-கல்லல் ரோடு ஆக்கிரமிப்பால் நெரிசல்  Mar 20, 13
 
மதகுபட்டியிலிருந்து கல்லல் செல்லும் ரோட்டில் இந்திராநகரை தாண்டி ரோட்டின் இரு புறமும் குறுகியதாக உள்ளது.எதிரே வரும் வாகனங்கள் செல்லும் வரை இதர வாகனங்கள் நின்று செல்ல வேண்டியுள்ளது.ரோட்டின் இரண்டு பக்கமும் வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும் காரைக்குடி,பரமக்குடி பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதால், அக்ரஹாரத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரையுள்ள குறுகிய ரோட்டில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் சிவகங்கையிலிருந்து வரும் வாகனங்களும் வருகிறது.ரோட்டில் ஆக்கிரமிப்பு பெருகி விட்டததோடு, இரு சக்கர வாகனங்களும் ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.