Nagaratharonline.com
 
இலுப்பக்குடியில் மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம் : கோயிலில் கூடும் பக்தர்கள் கூட்டம்  Mar 14, 13
 
இலுப்பக்குடியில் வால குருநாத அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. ஆண்டு தோறும் மார்ச் 8 முதல் 20 வரையிலும், செப்.,17 முதல் 29 வரை தினமும் காலை 6.30- 7.00 மணி வரை மூலவர் சிலையில் சூரிய வெளிச்சம் நேரடியாக விழும் காட்சியை பார்க்க முடியும். இந்நேரத்தில் வழிபட்டால் நோய்கள் தீரும், குழந்தை வரம், வாய் பேசாதவர்கள் கூட, பேசும் வாய்ப்பு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயில் நிர்வாகக்குழு சார்பில்,நேற்று சூரிய பகவான் வழிபாடு நடந்தது.

திருமாஞ் சோலையில் இருந்து 6 கி. மீ.,படமாத்தூர் விலக்கில் இருந்து 5 கி.மீ.,தொலைவில் இக்கோயில் உள்ளது.