Nagaratharonline.com
 
திருப்புத்தூர் -பொன்னமராவதி ரோட்டில் விபத்தை தடுக்க தரைப்பாலம்  Mar 11, 13
 
திருப்புத்தூர்-பொன்னமராவதி ரோட்டில் ஆத்திக்காடு வடக்கூர் வளைவில் விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை அகற்றி தரை மட்ட பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆத்திக்காடு வடக்கூர் வளைவு அருகே, ரோட்டில் பெரும் பள்ளங்கள் உள்ளன.இப்பகுதியில் உள்ள காடு,குடியிருப்பு பகுதிகளிலிருந்து மழை காலங்களில் வரும் தண்ணீர் ஓடையாக இந்த ரோட்டின் வழியாக முள்ளிக்குண்டு ஊரணிக்கு செல்கிறது.இதனால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுவிடுகிறது.இதனைத்தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் சிமென்ட் கான் கிரீட்டாலான தரை மட்ட பாலம் அமைத்தால் ரோடு சேதமடையாது. எனவே தரை மட்ட பாலம் அமைக்க இப்பகுதியினர் கோரியுள்ளனர்.மேலும் திருப்புத்தூர் -பொன்னமராவதி ரோட்டில் தெக்கூரிலிருந்து, 5 கி.மீ.தூரமுள்ள வஞ்சினிப்பட்டி வரையிலும், கண்டவராயன்பட்டி பகுதியிலும் ரோட்டில் பள்ளங்களும்,ரோட்டோரம் அரித்த நிலையிலும் உள்ளது.

வாகன போக்குவரத்து மிகவம் கடினமாக உள்ளது.இந்த ரோட்டையும் விரைவாக புதுப்பிக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.