Nagaratharonline.com
 
கண்டரமாணிக்கம் கொள்ளையில் ஐவர் சிக்கினர்  Mar 11, 13
 
கண்டரமாணிக்கத்தில் வீடுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர்,பெரியகுளத்தில் சிக்கினர்.

சந்தேகத்தின் பேரில், அவர்களிடம் நடத்திய விசாரணையில்,சில மாதத்திற்கு முன்பு, கண்டரமாணிக்கத்தில் சுப்பிரமணியன், ராமநாதன் ஆகியோர் வீடுகளை உடைத்து,ரூ.90 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்ததாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து,செல்வம் உட்பட 5 பேரும் திருக்கோஷ்டியூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.