Nagaratharonline.com
 
தேவகோட்டையில் தனியார் பஸ்சில் தீவிபத்து; பயணிகள் உயிர்தப்பினர்  Mar 8, 13
 
தேவகோட்டையில் உள்ள திருச்சி–ராமேசுவரம் சாலையில் நேற்று இரவு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. அதைத்தொடர்ந்து பஸ் நிறுத்தப்பட்டு என்ஜின் திறக்கப்பட்டதும் தீ குபீரென பற்றி எரிந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.

உடனே தேவகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதில் என்ஜினில் மேல் போடப்பட்டிருந்த கிளினிங் துணி, உள்ளே விழுந்ததில் தீப்பிடித்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.