Nagaratharonline.com
 
வேந்​தன்​பட்​டி​யில் என்எஸ்எஸ்​ முகாம் தொடக்கம்  Jan 1, 10
 
பொன்​ன​ம​ரா​வதி அரு​கே​யுள்ள வேந்​தன்​பட்​டி​யில்,​​ மேலைச்​சி​வ​புரி அரசு மேல்​நி​லைப் பள்ளி நாட்டு நலப்​ப​ணித் திட்​டத்​தின் சிறப்பு முகாம் தொடக்க விழா அண்மையில் நடை​பெற்​றது.​

​ ​ விழா​வுக்குப் பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர் ஆ.​ குண​சே​க​ரன் தலைமை வகித்​தார்.​ மேலைச்​சி​வ​புரி ஊராட்சி துணைத் தலை​வர் அ.​ அழகு,​​ வேந்​தன்​பட்டி ஊராட்சி துணைத் தலை​வர் சி.​ ராம​நா​தன் செட்​டி​யார் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​

​ ​ வேந்​தன்​பட்டி ஊராட்​சித் தலை​வர் எஸ்.​ விஜ​ய​கு​மார் முகாமை தொடக்​கி​வைத்​துச் சிறப்​பு​ரை​யாற்​றி​னார்.​ முகா​மில்,​​ வேலங்​குடி அரசு மேல்​நி​லைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் கோ.​ கண​பதி,​​ ரோட்​டரி சங்கத் துணை ஆளு​நர் ஆர்யு.​ ராமன் ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னார்.​

​ ​ நாட்டு நலப்​ப​ணித் திட்ட அலு​வ​லர் ஆ.​ சக்​தி​வேல் முகாம் குறித்து அறி​முக உரை​யாற்​றி​னார்.​ ​ உத​வித் திட்ட அலு​வ​லர் லெ.​ வடி​வேல்,​​ முது​நிலை ஆசி​ரி​யர் ஜெ.​ மில்​கா​சிங்,​​ பேரா​சி​ரி​யர் இராம.​ மோகன்,​​ மாண​வத் தொண்​டர்​கள் உள்​ளிட்​டோர் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்​ட​னர்.​

​ ​ முன்​ன​தாக உத​வித் தலைமை ஆசி​ரி​யர் ஜி.​ சண்​மு​க​சுந்​த​ரம் வர​வேற்​றார்.​ நிறை​வாக,​​ ஆசி​ரி​யர் கே.​ வெங்​கட்​ரா​மன் நன்றி கூறி​னார்

source : Dinamani 31/12/09