Nagaratharonline.com
 
கல்லல் அருகே கோவிலில் திருட்டு  Mar 5, 13
 
கல்லல் அருகே செம்பனூர் சேவுகப்பெருமாள் அய்யனார் உடையம்மை தாய் கோவில் கதவு பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.
இக் கோவில் ஊருக்கு வெளியே கண்மாய் கரை யில் அமைந்துள்ளது.

நேற்று காலை சாமி கும்பிட சென்றவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர்.
கோவிலில் இருந்த 6 குத்துவிளக்கு,அம்மனுக்கு நெற்றியில் சூட்டப்படும் வெள்ளி நெற்றி பட்டை
2 திருடப்பட்டுள்ளது. கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்துவிட்டு உண்டியலை கண்மாய்கரையில் போட்டு சென்றுள்ளனர். கல்லல் போலீசார் விசாரணை செய்கின்றனர்.