Nagaratharonline.com
 
ATM வசதியில்லாததால் மதகுபட்டி மக்கள் தவிப்பு  Mar 4, 13
 
மதகுபட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது.பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து செல்வதால் மக்களின் அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் சிவகங்கை,திருப்பத்தூருக்கு செல்லவேண்டியுள்ளது.மதகுபட்டியில் தொழிற்சாலை,பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் சம்பள பணத்தை எடுக்க பஸ் ஏறினால் தான் என்ற நிலை காணப்படுகிறது.அரசு ஊழியர்களும்,ஓய்வூதியம் பெறுபவர்களும் பணம் எடுக்க அலையவேண்டியுள்ளது.இங்குள்ள மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மதகுபட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்., ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.