Nagaratharonline.com
 
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு தேவை : பணம் வைத்திருப்போரை நோட்டமிடும் கும்பல்  Mar 3, 13
 
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிற்கு, பணத்துடன் வரும் பயணிகளை, நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை கண்காணிக்க போலீசார் முன்வரவேண்டும். காரைக்குடி அருகே உள்ள புதுவயல் அரிசி ஆலைகளில் இருந்து, வெளியூர்களுக்கு வியாபாரிகள் வசூலுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் தினமும் ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்து திரும்புகின்றனர். வெளியூருக்கு செல்லும் இவர்களில், ஒரு சிலர் ஒவ்வொரு நாளும் ரூட்டை மாற்றி வருகின்றனர். பெரும்பாலானோர், மதுரையில் இருந்து காரைக்குடிக்கு வருவர். சிலர் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாகவும் காரைக்குடி வருகின்றனர். ரும்பாலோனேர், ஒரே வழியையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அதிகளவில் பஸ் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில், திரியும் திருட்டு கும்பல், இவர்களை, நோட்டமிட்டு பின்தொடர்ந்து செல்கின்றனர். தனியாக சிக்கும் போது, பணத்தை வழிப்பறி செய்து தப்புகின்றனர். கல்லூரி ரோட்டின் பின்புறம் உள்ள ரோட்டில், தனியாக செல்லுவோரை மிரட்டியும், பெண்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தல், பாலியல் தொந்தரவுகளை கொடுக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே புறக்காவல் நிலையம் இருந்தும், பகலில் இது பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இரவில், பெயரளவில் ஒன்றிரண்டு போலீசாரே பணியில் உள்ளனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குள் மர்ம கும்பல்கள் நடமாட்டத்தை இவர்கள், கண்டுகொள்வதில்லை.