Nagaratharonline.com
 
அரளிப்பாறை மஞ்சுவிரட்டுக்கு 214 காளைகள் பதிவு  Feb 22, 13
 
அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசி மகம் அன்று ஐந்துநிலை நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு வருகிற 25–ந்தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மஞ்சுவிரட்டு நடத்துவதற்காக மாட்டு தொழுவத்திலிருந்து தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மஞ்சுவிரட்டிற்கு இதுவரை 214 மாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மஞ்சுவிரட்டை மலைஉச்சியில் இருந்து பாதுகாப்பாக மஞ்சுவிரட்டு காணமுடியும். பெண்கள், சிறுவர்கள் அதிக அளவில் இதனை காண வருவார்கள்.