Nagaratharonline.com
 
புதுக்கோட்டை நகரத்தார் சங்க ஆண்டுவிழா  Feb 15, 13
 
புதுக்கோட்டையில் நகரத்தார் சங்க ஆண்டு விழா மற்றும் விரிவாக்கப்பட்ட சங்க கட்டடத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.


விழாவுக்கு சங்கத் தலைவர் பெரி. திருப்பதி தலைமை வகித்தார். சென்னை, தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி மெ. சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கட்டடத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி நிதியளித்தவர்களைப் பாராட்டிப் பேசினார்.


சங்கச் செயலர் வெ. நாகப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் சுப.முத்து நிதிநிலை அறிக்கை வாசித்தார். முன்னாள் தலைவர் சா. சாத்தப்பாசுப்பிரமணியன், குழிபிறை எம்.எஸ்.எம். காவேரிஆச்சி, எம். சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிள்ளையார்பட்டி அறங்காவலர்கள் ஏ. ராமநாதன், மெ. கண்ணன், மதுரை நகரத்தார் சங்கத் தலைவர் நா. பழனியப்பன், ராஜாமுத்தையா மன்ற நிர்வாக அறங்காவலர் ஆர். சேக்கப்பன், உள்ளிட்டோர் வாழ்த்தினர்.