Nagaratharonline.com
 
காரைக்குடியில் தொடர் திருட்டால் பீதி  Feb 15, 13
 
காரைக்குடியில் சமீபத்தில், நடந்த தொடர் திருட்டால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

காரைக்குடி உட்கோட்டத்தின் கீழ்,
குன்றக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, சாக்கோட்டை, சோமநாதபுரம் காரைக்குடி சுற்றுப்பகுதியில், சமீப நாட்களாக தொடர் திருட்டுக்கள் அரங்கேறி வருகின்றன. கோட்டையூர் ஸ்ரீராம்நகர் அருகே, வீடு புகுந்து, 30 பவுன் நகை திருட்டு, அதை தொடர்ந்து ஒரு வீட்டில், வெள்ளி பொருட்கள், லேப்டாப் திருட்டு, காரைக்குடி செல்லப்பா நகரில், வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு, அரசு உதவி பெறும் பள்ளியின் பீரோவை உடைத்து திருட்டு இப்படி தொடர் திருட்டுகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்துள்ளன


இவற்றிற்கான வழக்கு பதிவதில், ஒரு சிலருக்காக போலீசார் தொடர்ந்து தாமத நிலையையே கடைபிடித்து வருகின்றனர்.

source : Dinamalar