Nagaratharonline.com
 
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் தொடருது வழிப்பறி,கொள்ளை  Feb 12, 13
 
தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிலும், அதனையொட்டியுள்ள மார்க்கெட்டிலும் அடிக்கடி பிக்பாக்கெட், வழிப்பறிகள் நடக்கின்றன.குற்றவாளிகள் தப்பிக்க பல வழிகள் இருப்பதால் எளிதில் "எஸ்கேப்' ஆகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் பஸ், உள்ளே வர ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு வழியும் தான் அமைக்க வேண்டும். ஆனால் தேவகோட்டையிலோ பஸ் ஸ்டாண்டில் நாலாபக்கமும் வழிகள் இருக்கின்றன. தவறு செய்யும் குற்றவாளிகள் ஒரு சில வினாடிகளுக்குள் தப்பி விடுவதால் போலீசார் திணறுகின்றனர்.

இப்பகுதியில் நடக்கும் திருட்டுக்களை தடுக்க பஸ் ஸ்டாண்டில் தடுப்பு சுவர் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.