Nagaratharonline.com
 
வேலூர், ஸ்ரீபுரம் தங்ககோவிலில் ரூ.21 கோடி மதிப்பில் 70 கிலோ தங்க சுவர்ணலட்சுமி சிலை பிரதிஷ்டை  Feb 11, 13
 
ஸ்ரீபுரத்தை தரிசிக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் தெய்வத்துடன் தனிப்பட்ட தெய்வீக தொடர்பை ஏற்படுத்தும் வகையில் சுமார் 70 கிலோ தங்கத்தால் 2½ அடி உயரமுள்ள மகாலட்சுமியின் உருவத்தை தங்க சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையின் மதிப்பு சுமார் ரூ.21 கோடி ஆகும்.

ஆயிரம் சூரியனின் ஒளியை கொண்டது போன்ற பிரகாசமாகவும், தங்கத்தோடு தேகம் கூடிய மகாலட்சுமி சிலை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை தரிசித்தால் மனிதனுக்குள் இருக்கும் அஞ்ஞானம் என்ற இருள் விலகி பிரகாசம் ஏற்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் ஸ்ரீபுரத்துக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளினாலேயே சுவர்ணலட்சுமிக்கு (தங்கலட்சுமி) துளசி தீர்த்ததால் அபிஷேகம் செய்யலாம். ஒரு மனிதன் கோவிலுக்கு செல்லும்போது கிடைக்கிற ஆனந்தத்தை விட தானே தன் கைகளால் செய்வதால் பல்லாயிரக்கணக்கான ஆனந்தம் ஏற்படும். அதனால் தான் பக்தர்களே அபிஷேகம் செய்யலாம்.