Nagaratharonline.com
 
தேவகோட்டையில் பிரச்னைகள் தாராளம்: நடவடிக்கை வருமா  Feb 8, 13
 
தேவகோட்டை நகராட்சியில் கடந்த ஒரு ஆண்டாக கமிஷனர் இல்லாத நிலை நீடித்தது. தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனராவது நகராட்சியிலுள்ள பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவருடமாக இந்த நகராட்சியில் கமிஷனர் இல்லாததால் நகர் முழுவதும் சுகாதாரம் சீர்கெட்டுள்ளது.தனியார் ஆக்கிரமிப்பு, ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அழகப்பா பூங்கா பராமரிக்கப்படாதது, திறக்கபடாமல் இருக்கும் நகராட்சி அலுவலகம், புதிய பஸ் ஸ்டாண்ட், கடைகளை ஆகியவற்றை திறக்க ஏற்பாடு செய்வது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் முறைபடுத்துதல், நகராட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட வரிவிதிப்பு முறைகேடுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ளது.