Nagaratharonline.com
 
காரைக்குடியில் பச்சிளம் குழந்தைகளுக்கு "நியோ நாட்டல்' ஆம்புலன்ஸ்  Feb 1, 13
 
பச்சிளம் குழந்தைகளை கொண்டு செல்லும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய "நியோ நாட்டல் ஆம்புலன்ஸ்' இயக்கப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்ட மேலாளர் ஜீவராஜ் கூறியதாவது:
"108' ஆம்புலன்சை விபத்து, அவசர காலங்களில் மட்டுமன்றி, போலீஸ், தீயணைப்பு போன்ற உதவிகளுக்கும் அழைக்கலாம்.

சென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படும் "நியோ நாட்டல் ஆம்புலன்ஸ்', விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்பட உள்ளது. பிறந்து 28 நாள் வரை உள்ள பச்சிளம் குழந்தைகளை கொண்டு செல்லும் வகையில், "இன்குபேட்டர்', "வென்டிலேட்டர்' வசதி உள்ளது, என்றார்.