Nagaratharonline.com
 
காரைக்குடி-சென்னை பகல் நேர விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்  Jan 31, 13
 
சென்னைக்கு பகலில் விரைவு ரயில் இயக்கும் வகையில் வரும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழில் வணிகக்கழகத்தின் தலைவர் முத்து. பழனியப்பன், கூறியதாவது :

காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி, வணிகம், தொழில்நுட்பம், மத்திய மாநில அரசு வங்கிகள் போன்றவைகளுக்கு மக்கள் வருகை அதிகரித்திருப்பதாலும், மத்திய அரசால் புராதன நகரங்கள் என இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.

எனவே மத்திய ரயில்வே பட்ஜெட் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலை யில் காரைக்குடியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிய விரைவுரயில் இயக்கும் வகையில் அறிவிக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பமாகும்.