Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோயில் நகைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்ப  Jan 29, 13
 
மகிபாலன்பட்டியில் ஜெயங்கொண்ட நாயகி (எ) பூங்குன்ற நாயகி அம்மன் திருக்கோயில் நகைகள் அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது

.கோயில் நகை மற்றும் பொருட்கள் இவ்வூரைச் சேர்ந்த சி.எஸ்.பி.சாத்தப்பன் மற்றும் ம.வெ.வெங்கடாசலம் ஆகியோர் பராமரிப்பில் இருந்தது. இந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை இந்து அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்க கோரப்பட்டது. அதன்படி 75 பவுன் தங்க நகைகள், அம்மன் வெள்ளி அங்கி உள்ளிட்ட சுமார் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சிவாஜி, ஆய்வாளர் மாரியப்பன், நகை சரிபார்ப்பு அலுவலர் தர்மராஜ் முன்னிலையில் பரம்பரை அறங்காவலர் முத்துவயிரவப்பட்டரிடம் ஒப்படைத்தனர்