Nagaratharonline.com
 
ஜன.,16ல் சிராவயல் மஞ்சுவிரட்டு: ஏற்பாடுகள் மும்முரம்  Jan 13, 13
 
சிராவயலில் பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மஞ்சுவிரட்டு பொட்டலில், கம்புகளால் இரண்டடுக்கு பாதுகாப்பு வளையம் கட்டுவது. பார்வையாளர் மாடம் கட்டுதல். கால்நடை டாக்டர்கள் சான்றுள்ள காளைகளை மட்டுமே அனுமதிப்பது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தல். வீரர்கள் கத்தி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது. காளைகள் மீது மண், கல், மிளகாய்பொடி தூவுதல், எழுமிச்சம் பழச்சாறு தெளிக்க தடை விதிப்பது. காளையை 5 பேருக்கு மேல் பிடிக்க கூடாது. காளை 50 மீ.,க்கு மேல் சென்ற பிறகே மற்ற காளையை அவிழ்க்கவேண்டும். பராம்பரிய மஞ்சுவிரட்டை கட்டுப்பாடுடன் நடத்த, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தனர்.